பாலப்பணியால் இன்று முதல் நெல்லை-கடையம் சாலையில் 3 நாள் போக்குவரத்து மாற்றம்

பாப்பாக்குடி, பிப். 22:  பாலப்பணிகள் காரண மாக நெல்லை-  கடையம் சாலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது.

நெல்லை - கடையம் சாலையில் அரியநாயகிபுரம், அரசங்குளம், முக்கூடல் பகுதியில் சாலையின் குறுக்கே உள்ள 4 சிறுவாய்க்கால் பாலங்கள் உள்ளன. இதனை பெரிய குழாய் பாலங்களாக மாற்றும் பணி, இன்று (22ம் தேதி) முதல் 24ம் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி இவ்வழியாக போக்குவரத்து மாற்றுப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது.

அதன்படி நெல்லையில் இருந்து முக்கூடல் வழியாக செல்லும் வாகனங்கள் பழையபேட்டை, மாறாந்தை, உடையாம்புளி, சிங்கம்பாறை வழியாக செல்லும். முக்கூடலில் இருந்து சேரன்மகாதேவி வழியாக செல்லும் பேருந்துகள் மாற்றுப்பாதையாக முக்கூடல் ஆற்றுப்பாலம் வீரவநல்லூர் வழியாக செல்லும் என தெரிகிறது.பாலப்பணி காரணமாக நெடுஞ்சாலை துறை சார்பில் நெல்ைல - கடையம் சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து துறை எந்த அறிவிப்பும் வெளியிடாதது பொதுமக்கள், மாணவ, மாணவிகளிடையே கடும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: