சங்கரன்கோவில், பிப். 22: காஷ்மீரில் நடந்த தற்கொலை படை தாக்குதலில் வீரமரணமடைந்த சிஆர்பிஎப் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், சங்கரன்கோவில் ஏவிகே இண்டர்நேஷனல் ரெசிடென்சி பள்ளி மற்றும் ஏவிகே மெமோரியல் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி சார்பில் மாணவ, மாணவிகளின் மவுன ஊர்வலம் நடந்தது. பள்ளி முதல்வர் கிரிஜா தலைமை வகித்தார். ஏவிகே மெமோரியல் மெட்ரிக். பள்ளி முதல்வர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார்.
இதில் ஏவிகே சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக். பள்ளி மாணவ, மாணவிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர். சங்கரன்கோவில் பயணியர் விடுதி முன்பு தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயில் வாசலில் முடிவடைந்தது. பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகளும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.