பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபர்

களக்காடு, பிப். 22:  களக்காடு அருகே வீடு புகுந்து பெண் குளிப்பதை எட்டிப்பார்த்த வாலிபரை உறவினர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். களக்காடு  அருகே உள்ள ஜெ.ஜெ.நகர் கீழக்காலனியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி செல்வி  (42). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பிய இவர், குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது இதே ஊரைச் சேர்ந்த துரை என்ற வானமாமலை பெருமாள் (25),  செல்வியின் வீட்டிற்குள் புகுந்து, அவர் குளிப்பதை எட்டிப்  பார்த்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி, கூச்சலிடவே அவர் தப்பியோடினார். செல்வியின் சத்தம் கேட்டு வந்த அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள்,  வானமாமலை பெருமாளை விரட்டி சென்று பிடித்து களக்காடு  போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: