சங்கரன்கோவிலில் திமுக தெருமுனை பிரசார கூட்டம்

சங்கரன்கோவில், பிப். 22:  சங்கரன்கோவில் தேரடி திடலில். திமுக தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழா தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. தொழிலதிபர் அய்யாத்துரை பாண்டியன் தலைமை வகித்தார். நகர அவைத்தலைவர் பலவேசம், நகர முன்னாள் செயலாளர் ராஜதுரை, பொதுக்குழு உறுப்பினர் அன்புமணி கணேசன், ஒன்றிய முன்னாள் செயலாளர் வெற்றிவிஜயன், மூத்த நிர்வாகி தில்லைஅம்பலம், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் சங்கர், அண்ணாவியப்பன், செல்வபாண்டியன், டைட்டஸ்ஆதித்தன், முத்தாத்தாள், மாவட்ட பிரதிநிதி சேனா, இளைஞரணி ராம்சரவணன் முன்னிலை வகித்தனர். மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ் தொகுத்து வழங்கினார்.

திமுக நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன், பேச்சாளர்கள் சரத்பாலா,  சந்திரசேகர், மாரியப்பன் ஆகியோர் பேசினர். இதில் ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, அன்பழகன், மாவட்ட அணி துணை அமைப்பாளர்கள் பரமகுரு, ராசா என்கிற ராசையா, வக்கீல்கள் கண்ணன், முத்துராமலிங்கம், அன்புச்செல்வன், சார்பு அணி நிர்வாகிகள் அஜய் மகேஷ்குமார், சுதன்ராஜா, பெரியதுரை, பட்டறைச்சாமி, மகளிரணி வேலம்மாள், புனிதா, ஒன்றிய இளைஞரணி முருகன், சந்திரன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

Related Stories: