திமுக பிரமுகர் கார் மீது கற்களை வீசி தாக்குதல்

களக்காடு, பிப். 22:  களக்காடு அருகே உள்ள படலையார்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). விவசாயியான இவருக்கும், இதே தெருவை சேர்ந்த தொழிலாளி முருகன் (44) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

நேற்று முன்தினம் இரவு முருகன், இசக்கியப்பன் வீட்டு முன் நின்றிருந்த அவரது குடும்பத்தினர்களை அவதூறாக பேசியுள்ளார். இசக்கியப்பன் அவரை தட்டிக் கேட்டார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த முருகன், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இசக்கியப்பனின் சகோதரர் திமுக பிரமுகரான இளையராஜா என்பவருக்கு சொந்தமான கார் மீது கற்களை வீசி தாக்கினார். இதில் காரின் முன் பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதன்மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.

Related Stories: