விஸ்வ இந்து பரிஷத் ஆர்ப்பாட்டம்

செங்கோட்டை, பிப். 22:  காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில், 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், செங்கோட்டை நகர விஸ்வ இந்து பரிஷத் சார்பில், செங்கோட்டை நகர் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. இந்த போஸ்டர்களை நள்ளிரவில்  சிலர்  கிழித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்யக் கோரி செங்கோட்டை காவல் நிலையத்தில் இந்து முன்னணி மற்றும் விஸ்வ இந்து பரிஷத், பாஜ சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.  அப்போது எஸ்ஐ மாதவன், கட்சி  நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து செங்கோட்டை தபால் நிலையம் முன் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.  நகர  தலைவர் குருசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் பெரிகுழைக்காதர், பஜ்ரங்தள்  மாநில பொறுப்பாளர் சரவண கார்த்திக், திருக்கோயில் திருமடம் மாநில பொறுப்பாளர் காளியப்பன் ஆகியோர் பேசினர்.  மாவட்ட தலைவர் வன்னியராஜன், இணை செயலாளர் தளவாய், நகர தலைவர் இலஞ்சி முருகன், இந்து முன்னணி ஒன்றிய தலைவர் மாசானம், நகர செயலாளர் கணேசன், பண்பொழி செயலாளர் மகேந்திரா பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

Related Stories: