பாவூர்சத்திரம், பிப். 22: கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் பாவூர்சத்திரம், பூலாங்குளம், பெத்தநாடார்பட்டி, மேலப்பாவூர், வீ.கே.புதூர் மற்றும் ஆவுடையானூரை சேர்ந்த 200 பயனாளிகளுக்கு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் அசில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் திட்டத்தின் கீழ் தலா 50 கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ தலைமை வகித்து கோழிக்குஞ்சுகளை வழங்கினார்.
மேலும் பராமரிப்பு தொகையாக கோழிக்குஞ்சுக்கு ரூ.75 வீதம் 3,750, கூண்டு அமைக்க ரூ.2,500 மற்றும் பயிற்சி கட்டணம் ரூ.150ம் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.