ஈரோடு, பிப். 22: முதல்வரின் சிறப்பு நிதி பெற ஈரோடு ஊராட்சி ஒன்றிய(யூனியன்) அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து விண்ணப்பித்தனர்.தமிழக முதல்வர் கடந்த சில தினங்களுக்கு வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரூ. 2ஆயிரம் சிறப்பு நிதி வழங்கப்படும் என அறிவித்தார்.இதனையடுத்து, சிறப்பு நிதி பெற மக்களிடம் விண்ணப்பங்கள் பெற அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டது.இதைத்தொடர்ந்து, மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் ஈரோடு ஊராட்சி ஒன்றியத்திலும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த விண்ணப்பங்கள் பெற இன்றே(22ம் தேதி) கடைசி தேதி என தகவல் வெளியானதால், நேற்று ஈரோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அளித்தனர். இதுகுறித்து ஈரோடு ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், முதல்வரின் சிறப்பு நிதி பெற மாவட்டத்தில் உள்ள அந்தந்த யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் மகளிர் குழு மூலம் கிராமங்களில் உள்ள மக்களிடம் இத்திட்டம் பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.