மகள் காதலனுடன் சென்றதால் தாய் தற்கொலை

ஈரோடு, பிப்.22: ஈரோடு வீரப்பன்சத்திரம் பாரதி வீதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி சுதா(45). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். சுதாவின் மகள் கடந்த 19ம் தேதி அவரது காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறி சென்று விட்டார். இதனால் மனவேதனையடைந்த சுதா நேற்று முன்தினம் காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த சுதாவை மீட்டு சிசகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து விட்டு சுதா வரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: