திருப்பூர், பிப்.22: திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் தார் ரோடு அமைக்க ஜல்லி கற்கள் கொட்டி பல நாட்கள் ஆகியும் தார் ரோடு பணி நடக்காததால் பொது மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தை சுற்றிலும் உள்ள மண் ரோட்டை தார் ரோடு அமைக்கும் பணிக்காக ஜல்லி கற்கள் கொட்டி பல நாட்கள் ஆனது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரத்தின் முதல் நாள் திங்கட்கிழமை மக்கள் குறை தீர் கூட்டம் நடக்கிறது. மாதம் ஒரு முறை விவசாயிகள் குறை தீர் கூட்டம் நடக்கிறது.