பெண்ணை ஆபாசமாக திட்டிய கூலித் தொழிலாளி கைது

திருச்சி, பிப்.22: திருச்சி பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் மனைவி தனலட்சுமி (29). இவருக்கு மகன், மகள் உள்ளனர். சரவணன் கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாமல் இறந்து போனார். தனலட்சுமியின் பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஜெயசீலன் (46). கூலித்தொழிலாளி. இவருக்கும், தனலட்சுமி குடும்பத்தினருக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போதையில் சென்ற ஜெயசீலன், தனலட்சுமி வீட்டு கதவை தட்டி ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். இதனால் மனவேதனைஅடைந்த தனலட்சுமி, இதுகுறித்து பொன்மலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிந்து ஜெயசீலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: