திருச்சி அரசு மருத்துவமனையில் சார்ஜரில் இருந்த செல்போனை திருடிய வாலிபர் கைது

திருச்சி, பிப்.22: கரூர் மாவட்டம் கடவூரை சேர்ந்தவர் வேலு மகன் பழனிசாமி (21). இவரது உறவினர் உடல்நிலை குன்றிய நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் பழனிசாமி அரசு மருத்துவமனையில் பார்வையாளர்கள் அமரும் இடத்தின் அருகே செல்போனிற்கு சார்ஜ் போட்டு அமர்ந்திருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் பழனிசாமி, செல்போனை எடுத்து கொண்டு தப்பியோட முயன்றார். இதைபார்த்த பழனிசாமி, திருடன், திருடன் என கூச்சலிட்டு வாலிபரை துரத்தி பிடித்து செல்போனை பறித்தார். பின்னர் அவரை அரசு மருத்துவமனை போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் நடத்திய விசாரணையில் செல்போனை திருடியது திருச்சி மாவட்டம் முசிறி கொல்லிமேடு கிராமத்தை சேர்ந்த பழனிசாமி (25) என்பது தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: