×

திருவெறும்பூர் அருகே டிரைவர் தீக்குளித்து தற்கொலை

திருவெறும்பூர் பிப் 22 : திருவெறும்பூர் அருகே குடிப்பழக்கத்தை நிறுத்தியதால் ஏற்பட்ட மன உளைச்சலில் டிரைவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருவெறும்பூர் அருகே உள்ள நொச்சிவயல் புதூர் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வீரபாண்டியன் (44). இவர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். குடிப்பழக்கம் இருந்து வந்த நிலையில் குடிப்பழக்கத்தை நிறுத்தியுள்ளார். இதனால் வீரபாண்டியன் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த வீரபாண்டியன் நேற்று முன்தினம் வீட்டிலிருந்த மண்ணெண்ணையை எடுத்து உடம்பில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்குப் போராடிய அவரை சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரபாண்டியன் இறந்தார். திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : death ,Tiruvarur ,suicide ,
× RELATED கூட்டுறவு மேலாண்மை முழுநேர...