காவிரி பாலத்தின் அடியில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்பு

திருச்சி, பிப்.22:  திருச்சி காவிரி பாலத்தின் அடியில் தேங்கிய நீரில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடந்தது. அவர் யார்? நீரில் மூழ்கி இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீரங்கம், அம்மா மண்டபம் அருகே அய்யாளம்மன் கோயிலுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதையில் இருந்து காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இந்த பாலத்தின் அடியில் துர்நாற்றம் வீசுவதாகவும், அழுகிய உடல் கிடப்பதாகவும் ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். இதில் காவிரி பாலத்தின் 24வது தூண் அருகில் . தேங்கிய நீரில் குறைந்தளவு நீரோட்டத்தில் 50 வயது மதிக்கதக்க பெண் உடல் கிடந்தது. அழுகிய நிலையில் முகம் தெரியாத நிலையில் இருந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், நீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து உடலை நீரில் வீசி சென்றனரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: