திருவையாறு,பிப்.22: திருவையாறு வட்டாரம் வேளாண்மைத்துறை சார்பில் அட்மா சீப்பர்ஸ் திட்டத்தின்கீழ் 2018- 2019ம் ஆண்டுக்கான வெள்ளாடு வளர்ப்பு முறை பயிற்சி, கண்டமங்கலத்தில் நடந்தது. திருவையாறு வேளாண்மை உதவி இயக்குனர் சரசு தலைமை வகித்து வேளாண்மைத்துறை சார்ந்த திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கறவை மாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார். பயிற்சியில் 40 விவசாயிகள் பங்கேற்றனர். மாதாலட்சுமி நன்றி கூறினார்.