1,600 அலுவலர்கள், 224 பறக்கும்படை அமைப்பு பிளஸ்2 தேர்வெழுதும் 29,556 மாணவர்கள்

பிளஸ்2 பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 22 மையங்களில் 3,401 மாணவர், 3,998 மாணவிகள் என மொத்தம் 7,399 பேரும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 26 மையங்களில் 4,284 மாணவர், 5,420 மாணவிகள் என மொத்தம் 9,704 பேரும், தஞ்சை கல்வி மாவட்டத்தில் 33 மையங்களில் 3,734 மாணவர், 4,846 மாணவிகள் என மொத்தம் 8,580 பேரும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 15 மையங்களில் 1,711 மாணவர், 2,162 மாணவிகள் என மொத்தம் 3,873 பேர் என 13,130 மாணவர்கள், 16,426 மாணவிகள் என மொத்தம் 29,556 பேர் தேர்வெழுகின்றனர்.தஞ்சை, பிப்.22: தஞ்சை மாவட்டத்தில் நடைபெறவுள்ள 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கண்காணிக்க 1,600 அலுவலர்கள், 224 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

தஞ்சை மாவட்டத்தில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடைபெறவுள்ளது. இதையடுத்து தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பேசுகையில், தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 29 மையங்களில் 3,878 மாணவர், 3,724 மாணவிகள் என 7,602 பேர், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 37 மையங்களில் 5,519 மாணவர், 5,839 மாணவிகள் என 11,358 பேர், தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 40 மையங்களில் 4,919 மாணவர், 4,830 மாணவிகள் என 9,749 பேர், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 20 மையங்களில் 2,352 மாணவர், 2,416 மாணவிகள் என 7,602 பேர் என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 33,477 பேர் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ளனர்.

பிளஸ்1 பொதுத்தேர்வில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 22 மையங்களில் 3,180 மாணவர், 3,690 மாணவிகள் என 6,870 பேர், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 26 மையங்களில் 4,003 மாணவர், 5,199 மாணவிகள் என 9,202 பேர், தஞ்சை கல்வி மாவட்டத்தில் 33 மையங்களில் 3,567 மாணவர், 4,474 மாணவிகள் என 8,041 பேர், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 15 மையங்களில் 1,660 மாணவர், 2173 மாணவிகள் என 3,833 பேரும் என மொத்தம் தஞ்சை மாவட்டத்தில் 27,946 பேர் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், கூடுதல் துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் உட்பட 1,600 பேருக்கும் மேற்பட்டோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதை தடுக்கவும், கண்காணிக்கவும் 224 பறக்கும்படை உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

கலெக்டர் தலைமையில் கல்வித்துறை அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் பிறத்துறை அலுவலர்களை கொண்டு மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு தேர்வு மையங்களை ஆய்வு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்களில் குடிநீர் வசதி, இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகளை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதியில் தடையில்லா மின்சார வசதி ஏற்படுத்தியும், தேர்வு மைய வழித்தடத்தில் மாணவர்கள் சிரமமின்றி செல்வதற்கு வசதியாக கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டு

வருகிறது.கஜா புயல் பாதித்த பகுதி மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி அதிக தேர்ச்சியடைய முதன்மை கல்வி அலுவலர் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: