தஞ்சை, பிப். 22: திருவையாறு வட்டத்தில் காஸ் நுகர்வோர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 28ம் தேதி நடக்கிறது. திருவையாறு வட்டத்தில் காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர்களுக்கு சிலிண்டர் பதிவு செய்வதில் உள்ள சிரமங்கள், சிலிண்டர் வழங்குவதில் காலதாமதம், அரசு மானியம் நுகர்வோர் வங்கி கணக்கில் வரவு வைத்தல் போன்றவற்றில் உள்ள குறைபாடுகளை களைந்து எண்ணெய் நிறுவனங்களின் விதிமுறைகளுக்கு உட்பட்டு காஸ் சிலிண்டர் விநியோகத்தை சீர்படுத்த குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்படுகிறது. எனவே திருவையாறு வட்டத்தில் காஸ் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் 28ம் தேதி மாலை 3 மணிக்கு திருவையாறு தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தெரிவித்து தீர்வு காணலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.