×

கமிஷனர் மீது தாக்குதல்

உசிலம்பட்டி, பிப். 22: பணி முடிந்து வீடு திரும்பிய நகராட்சி கமிஷனரை தாக்கிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். உசிலம்பட்டி நகராட்சி கமிஷனராக பணியாற்றி வருபவர் சுப்பையா. இவர் நேற்று அலுவலக பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பினார். அலுவலகத்தை விட்டு வெளியே வந்தபோது, மர்ம நபர்கள் இரண்டு பேர் கமிஷனரை பின்புறமாக தாக்கி விட்டு தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சுப்பையா கொடுத்த புகாரின் பேரில், உசிலம்பட்டி நகர் போலீசார் வழக்குப்பதிந்து, கமிஷனரை தாக்கிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : commissioner ,
× RELATED தேர்தல் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய...