பள்ளி மாணவி தற்கொலை உடலை வாங்க மறுத்து 2வது நாளாக மறியல்

மதுரை, பிப். 22: மதுரை வண்டியூரை சேர்ந்த நாகேந்திரன் மகள் கீர்த்தனா(14). இவர் தெப்பக்குளம் பகுதியில் உள்ள பெண்கள் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளி தலைமையாசிரியர் திட்டியதாக கூறி, கடந்த 19ம் தேதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் மதுரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தெப்பக்குளம் பகுதியில் கீர்த்தனாவின் உறவினர்கள் நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் போலீசார் உரிய முறையில் வழக்குப்பதிய வில்லை என்று கூறி கீர்த்தனாவின் உடலை வாங்க மறுத்த உறவினர்கள், அரசு மருத்துவமனை முன்பு பனகல் சாலையில் நேற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததன் பேரில், உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: