திருமங்கலம், பிப்.21: கள்ளிக்குடி யூனியன் வில்லூர் கிராமத்தில் தென்னமநல்லூர் சாலையோரம் விரிவாக்க பகுதிகளில் இதுவரையில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய வில்லை. குறிப்பாக குடிநீர் வசதி, தெருவிளக்கு, போர்வெல் உள்ளிட்டவை அமைத்து தரவில்லை. பொது கிணற்றில் குப்பை கூழங்களை போட்டு நிரப்புவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. இதற்கு உடனடியாக தீர்வு காணும்படி வலியுறத்தி வில்லூர் கிராம விரிவாக்க பகுதியை சேர்ந்த பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் திரண்டு நேற்று கள்ளிக்குடி யூனியன் அலுவலகம் வந்தனர்.