சிஐடியூ கண்டன ஆர்ப்பாட்டம்

மதுரை, பிப், 22:  அரசு போக்குவரத்து கழக சிஐடியூ சங்கம் சார்பில் “ தமிழக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு உரிய நிதியை பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தேவையான உதிரிபாகங்கள், உபகரணங்கள் வழங்கிட வேண்டும். கிலோ மீட்டர் நீட்டிக்கும் முயற்சியினை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மதுரை புதூர் பணிமனை முன்பு மாவட்ட தலைவர் அழகர்சாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்டத் தலைவர் வாசுதேவன், மாவட்ட பொதுச்செயலாளர் கனகசுந்தர் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: