மதுரை, பிப். 22: சொத்து பிரச்னையில் அக்கா மகனை கொன்ற ராணுவ வீரருக்கு, மதுரை நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. சமயநல்லூர் அருகே திருவேங்கடம் தச்சம்பத்து மேலத்தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் (40). ராணுவ வீரராக பணியாற்றினார். இவரது அக்கா மகன் சுப்பிரமணியன். இவர் வாடிப்பட்டி அருகே அய்யங்கோட்டையில் வசித்து வந்தார். இவர்களுக்கிடையே நீண்ட காலமாக சொத்து பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 2013ம் ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு ஆறுமுகம் வந்தார்.