பேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து புதிய கட்டிடம்

சேலம், பிப்.22: ஓமலூர் பேரூராட்சிக்கு சொந்தமான நிலம் நகரப்பகுதியில் உள்ளது. அங்குள்ள அங்காளம்மன் கோயிலுக்கு அருகே பேரூராட்சி நிலத்தை ஆக்கிரமித்து, அனுமதியின்றி ஒருவர் கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனை தடுத்து நிறுத்தவும், சம்பந்தப்பட்ட திருக்கோயில் செயல் அலுவலர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், வருவாய்த்துறையினருக்கு புகார் அனுப்பினார். இதனையடுத்து, சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் வரதராஜன், சம்பந்தப்பட்ட இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து, அனுமதியின்றி கட்டிடம் கட்டியதற்காக விளக்கம் அளிக்கக்கோரி, சம்பந்தப்பட்ட பரம்பரை அறங்காவலருக்கும், சம்பந்தப்பட்ட கோயிலுக்கு பொறுப்பு வகிக்கும் தாரமங்கலம் கைலாசநாதர் கோயில் செயல் அலுவலருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Related Stories: