திண்டுக்கல், பிப். 22: திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயில் முன்பு மூதாட்டி இறந்ததால் நடை சாத்தப்பட்டது, திண்டுக்கல் மெயின்ரோட்டில் அபிராமி அம்மன் கோயில் உள்ளது. நேற்று இதன் கிழக்கு கோபுரம் முன்பு அப்பகுதியை சேர்ந்த மைதிலி (85) என்பவர் இறந்து கிடந்தார். அருகில் இருந்தவர்கள் இவரது உடலை எடுத்து சென்றனர். கோயில் முன்பு இறந்ததால் உடனே கிழக்கு கோபுர வாசல் மூடப்பட்டது. பின்னர் நாகராஜ் குருக்கள் தலைமையில் பரிகார பூஜைகள் செய்யப்பட்ட பின் காலை 10 மணிக்கு நடை திறக்கப்பட்டது.