×

கிணற்றில் நீச்சல் பழக சென்ற போது பிளஸ் 2 மாணவன் நீரில் மூழ்கி பலி

ஆட்டையாம்பட்டி, பிப்.22: ஆட்டையாம்பட்டி அருகே நீச்சல் பழக சென்ற பிளஸ் 2 மாணவன், தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
ஆட்டையாம்பட்டி அருகே மின்னக்கல் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் மோகன்ராஜ்(17). இவரது தாயார் இறந்து விட்டார். வெண்ணந்தூரை அடுத்த வெள்ளபிள்ளையார் கோயிலில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி, அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்2 படித்து வந்தான். மார்ச் 1ம் தேதி, பொதுத்தேர்வு நடைபெறுவதை முன்னிட்டு, மாணவர்களு–்க்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. நேற்று காலை, ஆட்டையாம்பட்டியை அடுத்த புதுபாளையம் சுருட்டையான்காடு மணி என்பவரது விவசாய கிணற்றில், நீச்சல் பழகுவதற்காக மோகன்ராஜ் தனது நண்பர்களுடன் சென்றான். அப்போது கிணற்றில் குதித்த அவன், தண்ணீரில் மூழ்கினான். அவரது  நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.இதுகுறித்து அவர்கள் ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு கொடுத்த தகவலின் ேபரில், தீயணைப்பு துறையினர் உதவியுடன் விரைந்து வந்த போலீசார், மோகன்ராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி ேநரத்திற்கு பின்னர், மோகன்ராஜை சடலமாக மீட்டனர். பின்னர், அவரது சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : student ,well ,
× RELATED சென்னையில் சோகம்… கெமிக்கல்களை...