சின்னாளபட்டி மாணவர்கள் சென்னையில் மீட்பு

செம்பட்டி, பிப். 22: சின்னாளபட்டி ஏடிஎஸ் நகரத்தை சேர்ந்தவர் ஜோதீஷ் (14). இவரது தந்தை புதிதாக டூவீலர் வாங்கியிருந்தார். இதில் கடந்த 18ம் தேதி ஜோதீஷ் டியூசனுக்கு சென்றார். உடன் அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன் (14), ஜெயசூர்யா (14) ஆகியோரையும் அழைத்து சென்றார். 3 பேரும் வீடு திரும்பாததால் இதுகுறித்து அம்பாத்துரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சென்னை அருகே மகாபலிபுரத்தில் 3 பேரும் பிடிபட்டனர். விசாரணையில் சென்னையை சுற்றி பார்க்க வந்தது தெரியவந்தது. இதுகுறித்த தகலின்பேரில் அம்பாத்துரை போலீசார் விரைந்து வந்து 3 மாணவர்களையும் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: