பொதுமக்களுக்கு இடையூறு: 7 பேர் மீது வழக்கு

செம்பட்டி, பிப். 22: மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் பெயரை வைக்க கோரியும், இவரது வரலாற்றை ஆறாம் வகுப்பு பாடத்திலிருந்து நீக்கியதை திரும்ப சேர்க்க கோரியும், டிஎன்சி அரசு அறிவித்துள்ளதை மாற்றி டிஎன்டி ஆக அறிவிக்க கோரியும் மதுரை விமானநிலையத்தை முற்றுகையிட நிலக்கோட்டை அடுத்த விளாம்பட்டி பகுதியிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் 7 வாகனங்களில் செல்ல திரண்டனர்.

அப்போது விளாம்பட்டி பஸ்நிலையத்தில் பொதுமக்களிடம் பங்கம் விளைவிக்கும் விதமாக சில இளைஞர்கள் பேசியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விஏஓ (பொ) பாலமுருகன் விளாம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் கருத்தாண்டிபட்டி மூவேந்தர், விளாம்பட்டி காசிமாயன், கார்த்திகேயன், பிரகாஷ், ரஞ்சித், சிவஞானம், ரகமது ஆகிய 7 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: