கொடைக்கானல் கூட்டத்தில் சலசலப்பு

கொடைக்கானலில் நடந்த கூட்டத்திற்கு நகராட்சி கமிஷனர் முருகேசன் தலைமை வகித்தார். நகரமைப்பு அலுவலர் முருகானந்தம், பொறியாளர் சாகுல் முன்னிலை வகித்தனர். இதில் திமுக நகர செயலாளர் முகமது இப்ராகிம், அமமுக நகர செயலாளர் கோவிந்தன், அதிமுக நகர துணை செயலாளர் ஜாபர் சாதிக் உள்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மூஞ்சிக்கல் பகுதியில் ஒரு கட்சிக்கு மட்டும் பேனர் வைப்பதற்கு நகராட்சி அனுமதி வழங்குவதாக மற்ற கட்சியினர் குற்றம்சாட்டினர். இதனால் கூட்டத்தில் சிறிதுநேரம் வாக்குவாதமாகி சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து நீதிமன்ற நெறிமுறைகளை அனைத்து கட்சியினரும் பின்பற்ற வேண்டும், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவோம் என அனைத்து கட்சியினர் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டனர்.

Related Stories: