ஒட்டன்சத்திரம், பிப். 22: ஒட்டன்சத்திரம் அருகே அரசப்பிள்ளைபட்டியில் சாலை பணியை கிடப்பில் போட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒட்டன்சத்திரம் அருகேயுள்ளது அரசப்பிள்ளைபட்டி. சுமார் 1500 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு அரசு ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இப்பகுதியில் அரசு பஸ் காலை, மாலை என இருவேளைகள் வந்து செல்கிறது. தவிர தனியார் பள்ளி பேருந்துகள் ஊருக்குள் சென்று வருகின்றன. மேலும் இப்பகுதி மக்கள் தங்கள் தேவைக்காக டூவீலர், நான்கு சக்கர வாகனங்களில் சென்று வருகின்றனர். இவை பயணிக்கும் அரசப்பிள்ளைபட்டியிலிருந்து அத்தப்பகவுண்டன்புதூர் வரை செல்லும் சாலை கடந்த சில மாதங்களாக சேதமடைந்துள்ளது. இதனால் வாகனஓட்டிகள் சென்று வர மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.