செம்பட்டியில் பைனான்சியர் வீட்டை உடைத்து 15 பவுன், ரூ.1.37 லட்சம் திருட்டு தொடர் சம்பவங்களால் மக்கள் பீதி

செம்பட்டி, பிப். 22: செம்பட்டியில் பைனான்சியர் வீட்டை உடைத்து 15 பவுன், ரூ.1.37 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். செம்பட்டி மூவேந்தர் காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன். பைனான்சியர். நேற்று முன்தினம் இவரது மனைவி, குழந்தைகள் கோயிலுக்கு சென்று விட்டனர். நண்பரை சந்திக்க சென்ற ராஜேந்திரன் இரவு 8 மணியளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த 13 பவுன் தங்க நகைகள், ரூ.1.37 லட்சம் ரொக்கத்தை திருடி சென்றனர்.

தகவலறிந்ததும் செம்பட்டி போலீசார் வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர். கடந்த 3 நாட்களாக செம்பட்டி போலீஸ் சரகத்தில் திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருகின்றன. இதில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லையென என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: