×

19 ஆண்டு தலைமறைவு குற்றவாளி கைது

கும்மிடிப்பூண்டி, பிப்.22: கும்மிடிப்பூண்டி அடுத்த பூவலம்பேடு  கிராமத்தை  சேர்ந்தவர் மணி (48). இவர் கடந்த 19 வருடங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக பாதிரிவேடு போலீசார் இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் ஆந்திர மாநிலம் பனங்காடு பகுதியைச் சேர்ந்த குமார்  (41) கைது செய்யப்பட்டார். அவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.  
இந்நிலையில் அந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியான ஆந்திரா மாநிலம் ராமாபுரம் பகுதியை சேர்ந்த சிவகுமார் (65) என்பவர் கும்மிடிப்பூண்டி பைபாஸ் சாலையை ஒட்டியுள்ள கரிமேடு பகுதியில் வசித்து வருவதாக நேற்று பாதிரிவேடு போலீசாருக்கு  ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து அங்கு சென்ற ேபாலீசார் சிவக்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED நடப்பு நவரை பருவத்தில் முதற்கட்டமாக 8...