வேலூர், பிப்.22: வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் காலியாக உள்ள கம்பியாளர் பணியிடங்களை நிரப்ப கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவு செய்யப்பட்டது. அதன்படி தகுதியான கள உதவியாளர்கள் பட்டியல் தயாரித்து சென்னைக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.இதையடுத்து முதற்கட்டமாக வேலூர் மின்பகிர்மான வட்டத்தில் உள்ள கள உதவியாளர்கள் 39 பேருக்கு கம்பியாளராக பணி வழங்கப்பட்டது. இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் வேலூர் மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் ராஜேந்திரனிடம் பணி ஆணை பெற்றுக் கொண்டு, ஆங்காங்கே பணியில் இணைந்தனர். இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.