×

தேமுதிகவுடன் அதிமுகதான் பேச்சுவார்த்தை நடத்துகிறது - பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில், பிப்.22: தேமுதிகவுடன் அதிமுகதான் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறது என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
நாகர்கோவிலில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம்  கூறியதாவது:தேமுதிகவுடன் கூட்டணி குறித்து அதிமுகதான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார் என நம்புகிறேன்.  அதிமுக கூட்டணியில் பா.ஜனதாவிற்கு 5 இடங்களும், பாமகவிற்கு 7 இடங்களை அளித்துள்ளதை கூட்டணி என்ற கண்ேணாட்டத்தில் தான் பார்க்கிறேன்.கன்னியாகுமரி தொகுதியில், 1998 முதல் பா.ஜனதாவில் யாரும் போட்டி போட  கேட்கவில்லை. இதனை வைத்துதான் தளவாய்சுந்தரம் என்னை கன்னியாகுமரி வேட்பாளராக கூறியிருக்கலாம். குமரியில் கடந்த 4 ஆண்டுகளாக அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில், நலத்திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். எனவே மத, இன வேறுபாடின்றி அனைத்து தரப்பினருமே பா.ஜனதாவிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து பார்வதிபுரம் பாலம், மார்த்தாண்டம் பாலம் ஆகியவற்றை பார்வையிட்டு விட்டு, கன்னியாகுமரி சென்றார்.

Tags : AIADMK ,talks ,interview ,DMDKI - Ponadarakrishnan ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...