×

திங்கள்சந்தை நவீன பேருந்து நிலைய கட்டுமான பணி பிப். 25ல் தொடக்கம்

திங்கள்சந்தை, பிப். 22: திங்கள்நகர் பேருந்து நிலையம் 3 பிரிவுகளாக செயல்பட்டு வந்தது. 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பழமையான பேருந்து நிலையத்தை இடித்து அகற்றிவிட்டு புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதை ஏற்று தமிழக அரசு ₹6 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து 2 ஆண்டுகளில் பணிகளை செய்து முடிக்கும் வகையில் ஒப்பந்த நிறுவனத்திற்கு பணியாணையும் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பழைய பேருந்து நிலைய கட்டிடங்கள் இடித்து அகற்றும் பணி தொடங்கியது.
இதன் ஒரு பகுதியாக புதிய நவீன பேருந்து நிலையம் கட்டுமான பணி வரும் 25ம் தேதி தொடங்கும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், எம்பிக்கள், அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொள்கிறார்கள். இப்பணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைக்கிறார் என கூறப்படுகிறது.

Tags :
× RELATED ‘வைப்புநிதி உங்கள் அருகில்’ விழிப்புணர்வு நிகழ்ச்சி