சென்னை: வில்லிவாக்கம் பாட்டை சாலையை சேர்ந்தவர் முருகன் (39). எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் பின்புறம் ஏ.ஆர்.காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அன்னிபெசன்ட் (39). சென்னை தலைமை செயலக பாதுகாப்பு பணியில் உள்ளார். மேற்கண்ட இருவரும் அரசு வேலை, எம்பிபிஎஸ் சீட் வாங்கித்தருவதாக ஏமாற்றி பலரிடம் ரூ44 லட்சம் மோசடி செய்துள்ளனர். புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த ஐசிஎப் காவல்நிலைய இன்ஸ்பெக்டர் காமேஸ்வரி, நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் கீழ்ப்பாக்கம் துணை ஆணையரிடம் புகார் அளித்ததன் பேரில், அந்த பெண் காவலரை கைது செய்து விசாரித்தனர்.