×

திருவட்டாறு அருகே இளம்பெண் மாயம்

நாகர்கோவில்: திருவட்டாறு அருகே வருக்கபிலாவிளையை அடுத்த கல்லங்குழியை சேர்ந்தவர் ஜெர்லின் சுபின் (28).  கட்டிட தொழிலாளி. இவரது மனைவி சைனி (26). ஜெர்லின்சுபின் வேலைக்கு சென்ற பின்னர்  சைனி யாருடனோ செல்போனில் பேசி வந்துள்ளார். இதுபற்றி அக்கம்பக்கத்தினர் சுபினிடம் கூறியுள்ளனர். சுபினும், யாருடன் போனில் பேசுகிறாய் என சைனியிடம் கேட்டுள்ளார். இதனால் மனவருத்தம் அடைந்த சைனி கடந்த 18ம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் சைனியை பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து திருவட்டாறு போலீசில் ஜெர்லின் சுபின் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சைனியை தேடி வருகின்றனர்.

Tags : Thiruvattar ,
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்