தக்கலை,பிப்.22: பத்மநாபபுரம் நகர தொழில் வணிகர் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் தக்கலையில் நடைபெற்றது. தலைவர் ரேவன்கில் தலைமை வகித்தார். பொது செயலாளர் விஜயகோபால், பொருளாளர் சங்கர மூர்த்தி, துணை தலைவர் சண்முகம், செயலாளர் மோசஸ் ஆனந்த், தணிக்கையாளர் ஜகபர் சாதிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தக்கலையில் மேம்பாலம் அமைந்தால் வணிகர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். மேம்பாலம் வேண்டாம் என கூறி கடையடைப்பு, உண்ணாவிரம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் அரசும், மத்திய அமைச்சரும் இதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். ஆதலால் 15 பேர் கொண்ட மேம்பால மீட்பு குழு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. ஆதலால் 25ம் தேதி மாலை 4 மணி முதல் 5 மணி வரை மணலி முதல் கொல்லன்விளை வரை மனித சங்கலி போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.