×

மனுவேல் மருத்துவமனையில் நாளை மூளை தண்டுவட நரம்பியல் சிகிச்சைப்பிரிவு தொடக்க விழா

நாகர்கோவில், பிப். 22: நாகர்கோவில் தேரேக்கால்புதூரில் உள்ள மனுவேல் மருத்துவமனையில், மூளை தண்டு வட சிறப்பு சிகிச்சை நிபுணர் மரிய சுபிசன் சேர்ந்ததை தொடர்ந்து நாளை (23ம் தேதி) மனுவேல் மூளை தண்டு வட உயர் சிகிச்சைப்பிரிவு தொடங்கப்படுகிறது. இதனை எஸ்.பி நாத் தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து மனுவேல் எலும்பு முறிவு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஜெய்ஷித் மனுவேல் கூறியதாவது: மூளை தண்டு வட சிகிச்சை நிபுணர் டாக்டர் மரியசுபிசன் நரம்பியல் அறுவை சிகிச்சை உயர் படிப்பை சென்னை மருத்துவ கல்லூரியில் படித்துள்ளார். இவர் 2014ம் ஆண்டிற்கான நரம்பியல் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். மூளை தண்டுவட நுண் அறுவை சிகிச்சையிலும், மூளை தண்டுவட தொலை நோக்கு அறுவை சிகிச்சையிலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிறப்பு பயிற்சி பெற்றவர். மேலும் நரம்பியல் அறுவை சிகிச்சை செய்யும் போதே நரம்பை சோதனையிடும் சிறப்பு அறுவை சிகிச்சைக்கான பயிற்சியை ஜெர்மனியில் பெற்றவர். கடந்த நான்கரை வருடங்களாக திருவனந்தபுரம் மற்றும் மதுரையில் பணியாற்றி 1000க்கும் மேற்பட்ட மூளை தண்டு வட அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்துள்ளார். மேலும் மூளை ரத்தக்குழாய் பிரச்னைகளை சரி செய்யும் அறுவை சிகிச்சை, நுண்துளை தண்டுவட அறுவை சிகிச்சை, தொலை நோக்கு மூளை அறுவை சிகிச்சைகள், மூளை தண்டு வட கட்டி அறுவை சிகிச்சைகள், தலைக்காயம் மற்றும் தண்டு வட காயம் சரிசெய்யும் மருத்துவம் ஆகியவற்றில் சிறப்பு பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மனுவேல் நரம்பியல் பிரிவில் உலகத்தரம் வாய்ந்த  உபகரணங்களான உயர்தர நுண் அறுவை சிகிச்சைக்கருவி, நரம்பியல் தொலைநோக்கு அறுவை சிகிச்சைக்கருவி, மூளை தண்டு வட கட்டியை கரைக்கும் கருவி, ஆகியவை வாங்கப்பட்டுள்ளன என்றார்.

Tags : opening ceremony ,Manuel Hospital ,
× RELATED கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி லிமிடெட் கிளை திறப்பு விழா