×

தொழிலதிபர் அழகி மணி முதலாண்டு நினைவஞ்சலி

தக்கலை,பிப்.22:  தொழிலதிபர் அழகி மணி முதலாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. தக்கலையை அடுத்த வைகுண்டபுரத்தை சேர்ந்தவர் அழகி மணி. தொழிலதிபரான இவர் அழகி நிறுவனங்களை அழகியமண்டபம், களியக்காவிளை, தக்கலை, நாகர்கோவில், பாலராமபுரம் பகுதிகளில் நடத்தி வந்தார். கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற இவர் ஆண்டு தோறும் ஏழை பெண்களுக்கு சீர் வரிசைகள் கொடுத்து இலவச திருமணங்களையும் நடத்தி வந்தார். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி 19ல் மறைந்தார். இந்நிலையில் இவரது முதலாண்டு நினைவு அஞ்சலி நிகழ்வு அவரது மணிமண்டபத்தில் வைத்து பிரார்த்தனையுடன் நடைபெற்றது.
இதில் பா.ஜ., பொறுப்பாளர்கள், வைகுண்டபுரம் ஊர் மக்கள், அழகி நிறுவன ஊழியர்கள், வர்த்தக பிரமுகர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், உறவினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அழகி லீலா மணி, இன்ஜினியர் அழகி விஜி, சிவகுமார், டாக்டர்கள் சந்தியா, சுஜி மற்றும் குடும்பத்தினர் செய்திருந்தனர்.

Tags : Businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்