பைக் திருட்டு

ஈரோடு, பிப். 21:    ஈரோடு வீரப்பன் சத்திரம் கொத்துக்காரர் தோட்டத்தை சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணன் (36). காங்கிரஸ் கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் நாச்சியப்பா வீதியில் உள்ள அவரது அலுவலகம் முன் அவரது பைக்கை நேற்று காலை நிறுத்தினார். பின்னர்  வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. இதைத்தொடர்ந்து பைக் நிறுத்தப்பட்ட பகுதியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, அதில் 3 இளைஞர்கள் உள்ளே வருவதும், பின்னர் ராஜேஷ் கண்ணனின் பைக்கை கள்ள சாவியை பயன்படுத்தி திருடி செல்வது தெரியவந்தது. இதையடுத்து ராஜேஷ் கண்ணன் ஈரோடு டவுன் போலீசில் புகார் அளித்தார். சிசிடிவி கேமராக்களில் பதிவான படத்தை வைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: