பிக்பாக்கெட் வாலிபர் கைது

ஈரோடு, பிப். 21:  ஈரோடு கனிராவுத்தர் குளம் பகுதியை சேர்ந்தவர் மோகனசுந்தரம் (39). இவர் சித்தோடு அருகே டாஸ்மாக் பார் வைத்து நடத்தி வருகின்றார். நேற்று முன்தினம் ஈரோட்டில் இருந்து சித்தோடு செல்வதற்காக மோகனசுந்தரம் பஸ்சில் சென்றார். பின்னர் பஸ்சில் இருந்து இறங்கி நடந்து சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த வாலிபர் ஒருவர் மோகனசுந்தரத்தின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பியோட முயன்றார். பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து சித்தோடு போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்ட வாலிபர் கவுந்தப்பாடி இரட்டை வாய்க்கால் பகுதியை சேர்ந்த குமரவேல் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து மோகனசுந்தரம் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்தனர்.

Related Stories: