காதல் ஜோடி போலீசில் தஞ்சம்

சென்னிமலை, பிப். 21: சென்னிமலை அருகே மேலப்பாளையம் காந்தி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி. இவரது மகன் தாமோதரன் (26). இவர் கோவையில் உள்ள பேட்டரி பைக் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தாமோதரன் கடந்த 3 ஆண்டுக்கு முன்பு ஈங்கூர் அருகே உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்த போது, அவருடன் படித்த சிவகிரியை சேர்ந்த மணிகண்டன் மகள் மணிமேகலை (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்துள்ளது. படிப்பை முடித்த தாமோதரன் கோவையில் வேலைக்கு சேர்ந்தார். மணிமேகலை வீட்டில் இருந்தார். இவர்கள் காதல் தொடர்ந்தது.  இந்நிலையில், மணிமேகலைக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்துள்ளனர். அப்போது காதல் குறித்து தெரிவித்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மணிமேகலையின் பெற்றோர் அவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் வீட்டை விட்டு சென்று நேற்று தாமோதரனும், மணிமேகலையும் அவிநாசியில் உள்ள ஒரு பிள்ளையார் கோயிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து சென்னிமலை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர்.   சென்னிமலை போலீசார் இரு தரப்பு பெற்றோர்களையும் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இவர்கள் திருமணத்தை மணிமேகலையின் பெற்றோர் ஏற்க மறுத்துவிட்டு திரும்பி சென்று விட்டனர். பின்னர் தாமோதரனின் பெற்றோர் மணமக்களை தங்கள் வீட்டுக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: