சென்னை: சென்னை கூடுவாஞ்சேரி அடுத்த கீரப்பாக்கம் நான்கு ரோடு பகுதியில் இருந்து ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி வரை கீரப்பாக்கம் பிரதான சாலை குறுகலாக உள்ளது.
நேற்று காலை மாம்பாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றும் 6 பெண்கள் உள்பட 11 ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேன் கீரப்பாக்கத்தில் இருந்து கண்டிகை வழியாக சென்று கொண்டிருந்தது.கீரப்பாக்கம் பிரதான சாலை வந்தபோது எதிரே ஒரு டாரஸ் லாரி வேகமாக வந்தது. இதனால் விபத்து ஏற்படாமல் இருக்க வேனை இடதுபுறமாக டிரைவர் திருப்பியதில் எதிர்பாராத விதமாக சாலையோரத்தில் உள்ள 20 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.