நங்கவள்ளி அருகே உரக்கடையில் தீ விபத்து பொருட்கள் எரிந்து சேதம்

மேச்சேரி, பிப்.21: நங்கவள்ளி அருகே உரக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில், பொருட்கள் எரிந்து நாசமானது.

சேலம் மாவட்டம், நங்கவள்ளி அருகே சாமுட்டியூர் பகுதியை சேர்ந்தவர் ஐயந்துரை(60). வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், நங்கவள்ளி பஸ் ஸ்டாப் அருகே தெற்குரத வீதியில் உரக்கடை நடத்தி  வருகிறார். கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போதிய மழையில்லாததால், உரம் மற்றும் பூச்சி மருந்து விற்பனை  குறைந்து விட்டது. இதனால், கடந்த 3 நாட்களாக கடையை திறக்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை, இவரது உரக்கடையில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவ்வழியாக சென்றவர்கள், உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், தண்ணீரை பீய்ச்சியடித்து, அருகில் இருந்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்து அணைத்தனர். இந்த தீ விபத்தில், கடையில் இருந்த லட்சக்கணக்லான மதிப்புள்ள உரம், பூச்சி மருந்து உள்ளிட்ட பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து, நங்கவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: