கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், பிப்.21:பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பிஎஸ்என்எல்லுக்கு 4ஜி அலைக்கற்றையை வழங்க வேண்டும், 15சதவீத பலன்களுடன் ஊதிய மாற்றம், நில மேலாண்மை கொள்கைக்கு உடனடி ஒப்புதல் உள்ளிட்ட 8அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பிஎஸ்என்எல் அதிகாரிகள், ஊழியர்கள் கூட்டமைப்பினர் கடந்த 3நாட்களாக வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆத்தூரில் உள்ள தொலைபேசி நிலையம் முன்பு, ஊழியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர்கள் அருள்மணி, சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில், மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கிளை செயலாளர்கள் வேல்விஜய், சுந்தரமூர்த்தி, கருத்துரை வழங்கினார். மாவட்ட உதவி செயலாளர் ஹரிஹரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். பெரியசாமி நன்றி கூறினார்.

Related Stories: