×

அரசு பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கல்

ஏற்காடு, பிப்.21: ஏற்காடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
இதில், ஏற்காடு தொகுதி எம்எல்ஏ சித்ரா கலந்து கொண்டு, 103 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கினார். பின்னர், ஏற்காடு கால்நடை மருத்துவமனையில், நாகலூர் கிராமத்தில் விலையில்லா ஆடு பெற்ற பயனாளிகள் 105 பேருக்கு, ஆட்டு பட்டி அமைக்க ₹2 ஆயிரத்திற்கான காசோலையை வழங்கினார். இதே போல், ஏற்காடு சந்தை வளாகத்தில் ₹40 லட்சம் மதிப்பீட்டில், 30 சந்தை திடல்கள் கட்டுவதற்கான பணியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஏற்காடு பிடிஓ ராமசந்தர், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் புகழேந்தி, துணை தலைவர் விஜய், பாலு, குணசேகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : government school students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்