பிரச்னைக்குரிய மையங்களே இல்லை

சேலம் மாவட்டத்ைத பொறுத்தவரையில் எந்தவொரு தேர்வு மையமும் பிரச்னைக்குரிய மையமாக இல்லை. அதே ேநரத்தில் அனைத்து தேர்வு மையங்களுக்கும் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்படும். ஒழுங்கீனச்செயல்களில் ஈடுபடுவோர் மீது எடுக்கப்படும் நடவடிக்கை மற்றும் தண்டனைப் பற்றிய சுவரொட்டிகள் தேர்வு மையங்களில் ஒட்டப்படும். தேர்வுகளில் முறைகேடுகள் காப்பியடித்தல் மற்றும் ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபடுதல் முதலியவற்றைக் கண்காணிப்பதற்கு கோட்டாட்சியர்கள், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் சங்ககிரி, சேலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் தலைமையிலும், சேலம் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் தலைமையிலும் தனித்தனியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: