சேலம் சரகத்திற்கு மாற்றப்பட்ட 11 இன்ஸ்பெக்டர்களுக்கு பணியிடம் ஒதுக்கீடு

சேலம், பிப்.21:சேலம் சரகத்தில் மாற்றப்பட்ட 11 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற தேர்தலையொட்டி, 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிந்து வரும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள், இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, சேலம் சரகத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள், சமீபத்தில் மாறுதல் செய்யப்பட்டனர். இதனையடுத்து, புதிதாக மாற்றப்பட்ட 11 இன்ஸ்பெக்டர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் உட்கோட்டத்திற்கும், வெங்கடாசலம் தர்மபுரி மாவட்டம் கோட்டப்பட்டிக்கும், முத்துசாமி சேலம் மாவட்டம் சங்ககிரிக்கும், ரஜினி கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி போலீஸ் ஸ்டேசனுக்கும், ரங்கசாமி தர்மபுரி மாவட்டம் அரூர் மதுவிலக்கு பிரிவிற்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், இன்ஸ்பெக்டர் லதா தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், விஜயலட்சுமி சேலம் மாவட்டம் வாழப்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், முருகேசன் ஆத்தூர் ரூரல் போலீஸ் ஸ்டேசனுக்கும், சுஜாதா கொண்டலாம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கும், தண்டபாணி தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் போலீஸ் ஸ்டேசனுக்கும், அங்கிருந்த முனியசாமி சேலம் மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவிற்கும் நியமித்து, சரக டிஐஜி செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: