×

சட்ட கல்லூரியில் சட்ட உதவி துவக்கம்

ராமநாதபுரம், பிப். 21: ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் அரசு சட்டக்கல்லூரியில் சட்ட உதவி மையம் துவங்கப்பட்டது. சட்ட கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி கயல்விழி திறந்து சட்டகல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் நீதிமன்றத் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான ராமகிருஷ்ணன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலர் நீதிபதி ராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட வக்கீல் சங்கத் தலைவர் ரவிச்சந்திரராமவன்னி, செயலாளர் நம்புநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Law College ,
× RELATED சென்னையில் சட்டக்கல்லூரி அமைக்க இடம்...