×

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் பஸ் நிறுத்த கட்டிடம் கட்டும்பணி துவக்கம்

சாயல்குடி, பிப். 21: முதுகுளத்தூர் அரசு கல்லூரிக்கு பஸ் நிறுத்தம கட்டிடம் இல்லாததால் மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக தினகரனில் செய்தி வெளியானது. இதனையடுத்து எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பஸ் நிறுத்த கட்டிடம் கட்ட முதற்கட்ட பணிகள் துவங்கியது. கடந்த 2012-13 ஆம் ஆண்டில் முதுகுளத்தூரில் அரசு கலை, அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டது. இக்கல்லூரிகளுக்கு புதிய கட்டிடம் முதுகுளத்தூர்-தேரிருவேலி சாலையில் இரண்டாண்டிற்கு முன்பு திறக்கப்பட்டது. இளநிலை தமிழ், ஆங்கிலம், கணிதம், கணிப்பொறியியல், வணிகவியல் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு சுமார் 10 கி.மீ.க்கு மேல் உள்ள கீழத்தூவல், பேரையூர், தேரிருவேலி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர்.

வெளியூர் மற்றும் நெடுந்தொலைவிலிருந்து மாணவிகள் முதுகுளத்தூர் அரசு மாணவிகள் விடுதியில் தங்கி கல்லூரிக்கு வந்து செல்கின்றனர். கல்லூரிக்கு பஸ் நிலைய கட்டிடம் இல்லாததால், காலை, மாலை நேரங்களில் வெயிலில் காத்துக் கிடந்து செல்லும் நிலை உள்ளது.
மழை காலங்களில் பெரும் துயரை சந்தித்து வருவதாக மாணவர்கள் கூறியதாக தினகரனில் செய்தி வெளியானது. இதனையடுத்து கல்ல்லூரி முன்பு பஸ் நிறுத்தக் கட்டிடம் கட்டுவதற்கு, முதுகுளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மலேசியாபாண்டியன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்தார். டெண்டர் விடப்பட்டு, முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : bus stop building ,Government College ,Mudukulathur ,
× RELATED திருவாடானை அரசு கல்லூரியில் இரண்டாம் கட்ட பயிற்சி முகாம்